Saturday, May 29, 2010

இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி இளைஞர்களை புகைப்பழக்கதிற்கு ஊக்குவிக்கின்றார் - பசுமைத் தாயகம்


தினமும் 2500 பேர் இறந்து போகக் காரணமாகும், புகைப்பழக்கத்திற்கு, இளைஞர்கள் அடிமையாக  இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி துணைபோகின்றார் என பசுமைத் தாயகம் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பில் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவ் அமைப்புத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவ் அமைப்பின் மாநிலச் செயலாளர் இர.அருள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை முழுமையாகக் கீழே தரப்பட்டுள்ளது.  தமிழகத்தில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவரான விஜய் ஆன்டனி, பரப்பான செய்திகளில் இடம் பிடிப்பவராகவும் இருந்து வருவது குறிப்பிடத் தக்கது.